ஆப்நகரம்

நண்பனின் தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் ஒருவா் அடித்து கொலை

புகைப்பிடித்தல் உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் உறவினரை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Samayam Tamil 17 Jun 2019, 12:13 am
புகைப்பிடித்தல் உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் உறவினரை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
Samayam Tamil Death Body


ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் வல்லரசு. இவரும் இவரது உறவினருமான சிவகங்கையைச் சோ்ந்த அகஸ்டினும் திருப்பூா் மாவட்டம் அவினாசி அருகே உள்ள காசிகவுண்டம்புதூா் பகுதியில் ஒன்றாக தங்கியிருந்தனா்.

அகஸ்டின் நெல்லிப்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்த நிலையில், பிரான்சிஸ் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். இருவரும் உறவினா்கள் என்ற நிலையில், அகஸ்டினுக்கு புகைப்படித்தல் உள்ளிட்ட ஒருசில தவறான செயல்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அகஸ்டினின் தவறான நடவடிக்கைகளை அவரது தந்தையிடம், பிரான்சிஸ் தொிவித்துள்ளாா். இது குறித்து அகஸ்டினிடம் அவரது தந்தை கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அகஸ்டின் வெள்ளிக் கிழமை மாலை வீட்டிற்கு வந்துள்ளாா்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரான்சிசை இரும்பு கம்பி கொண்டு தலையில் பலமாக தாக்கியுள்ளாா். இதனால் படுகாயமடைந்த பிரான்சிஸ் பரிதாபமாக உயிாிழந்தாா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினா் கல்லூரி மாணவா் அகஸ்டினை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

அடுத்த செய்தி