ஆப்நகரம்

கதிகலங்க வைத்த கருக்கலைப்புகள்; சென்னை ஸ்கேன் சென்டருக்கு நேர்ந்த கதி இதுதான்!

சட்டவிரோதமாக ஏராளமான கருக்கலைப்புகளை அரங்கேற்றிய சென்னை ஸ்கேன் சென்டருக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Samayam Tamil 8 Jan 2020, 1:32 pm
”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்று கவிதை எழுதியவர் பாரதியார். அவரது கூற்றின்படி தற்போது பல துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர்.
Samayam Tamil Baby


இருப்பினும் பெண் சிசுக்களை கருவிலேயே அழித்துவிடும் பெற்றோர்களும் இன்னும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சட்டவிரோத செயலில் ஈடுபடும் ஸ்கேன் சென்டர்களும் தமிழகத்தில் இருப்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

விபரீத காதல் இதுதான் போல; வால்பாறையில் கேரள மாணவி உடல் - திக் திக் நிகழ்வுகள்!

அவற்றை களைந்தெறிய வேண்டியது அரசின் கடமை. அப்படியொரு ஸ்கேன் சென்டர் கண்டறியப்பட்டு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர் ஒன்றில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிவிக்கப்படுவதாக தகவல் பரவியது.

இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. அவர்கள் இதுபற்றி சுகாதாரத்துறைக்கு ரகசியமாக தெரிவித்துள்ளனர்.

100க்கும் அதிகமான பெண் சிசுக் கொலை; தமிழகத்தை உலுக்கும் ஸ்கேன் சென்டர்- அதிர்ச்சி பின்னணி!

இதனை உறுதி செய்யும் வகையில் கர்ப்பிணி ஒருவரை அந்த ஸ்கேன் சென்டருக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கம் போல் அவருக்கு ஸ்கேன் சென்டரின் உரிமையாளரும், மருத்துவ பரிசோதகருமான சிவசங்கரன் பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது அப்பெண்ணின் கருவில் இருப்பது ஆண் குழந்தை என்ற தகவலை வெளிப்படையாக கூறி அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இதுபற்றி சுகாதாரத்துறைக்கு அதிகாரிகளுக்கு அப்பெண் தகவல் தெரிவித்தார்.

உடனே அந்த சென்டருக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் ஸ்கேன் சென்டர் மற்றொரு மருத்துவரின் பெயரில் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

கத்தி, கயிறு; பலமுறை பாலியல் சித்ரவதை- கொடூரனை சிக்க வைத்த சிறுமியின் தோழி!

மேலும் சிவசங்கரன் எந்தவித மருத்துவப் படிப்பும் படிக்காமல் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து வந்துள்ளார். அந்த சென்டரில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் கலைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அடுக்கடுக்காக அதிர்ச்சிகர தகவல்களை கூறினர்.

இதையடுத்து ஸ்கேன் சென்டரில் இருந்த இயந்திரங்களை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் சட்டவிரோத கருக்கலைப்புகளை அரங்கேற்றிய ஸ்கேன் சென்டருக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி