ஆப்நகரம்

உடனே ஆரம்பிங்க... காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு..!

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Samayam Tamil 29 Mar 2022, 12:12 pm
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தும் வருபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் கஞ்சா விற்பனையை நூறு சதவீதம் தடுக்க முடியவில்லை. அதேபோல குட்கா தடை செய்யப்பட்ட பின்னரும் பெட்டி கடைகளில் அனாவசியமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அப்பகுதியில் உள்ள போலீசார் உடந்தையாக இருப்பதாகவும் பொது மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
Samayam Tamil file pic


இதனிடையே, கோவை பீளமேட்டில் கஞ்சா விற்றதாக கல்லூரி மாணவன் மகேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு "ஆபரேசன் கஞ்சா வேட்டை 20" நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த டிசம்பர் 2021-ஜனவரி 2022 நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக இந்த மாதம் 28.03.2022 முதல் 27.04.2022 வரை ஒரு மாதம் "ஆபரேசன் கஞ்சா வேட்டை 20" நடத்தப்பட வேண்டும். 2) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) கீழ்க்காணும் நடவடிக்கைகளை இம்முறையும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

அ) கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது. தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

அபார்ஷன் முதல் வலி நிவாரணி வரை... விருதுநகர் இளம்பெண் செய்தது என்ன?
ஆ) கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் பதுக்கல் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.

ஈ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் நிலைய ஆய்வாளர் வாட்சப் குழு ஒன்றை உருவாக்கி, ரகசியத் தகவல் சேகரிக்க வேண்டும்'' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி