ஆப்நகரம்

புதுச்சேரியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த தமிழக வாலிபர் கைது..!

புதுச்சேரியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த வாலிபரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 14 Jan 2022, 8:52 pm
புதுச்சேரியில் ஒரே நாளில் நகர பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை மற்றும் அதன் அருகே உள்ள சுகாதார இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு இருப்பதாக பெரிய கடை போலீசாரிடம் புகார்கள் வந்ததை அடுத்து கிழக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர பகுதிகளில் போலிசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
Samayam Tamil புதுச்சேரி வாகன திருட்டு


அப்போது, ஆம்பூர் சாலை காச நோய் மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பேட் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற அப்பு (25) என்பதும், அவர் எடுத்து வந்தது அரசு மருத்துவமனை அருகே திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பதுதெரிய வந்தது.

கோயிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: அம்மன் கோயில் பூசாரி கைது

அதை அடுத்து அவரை கைது செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த மற்றோரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பிரபு மீது திருட்டு வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி