ஆப்நகரம்

செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர்கள் 4 பேர் ஆந்திராவில் கைது

தமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என ஆந்திர காவல்துறை சிறையில் அடைப்பதும், குற்ற மற்றவர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என காவல்துறை சிறை பிடிக்கிறது என்றும் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது

Samayam Tamil 10 Oct 2019, 11:53 am
திருப்பதி: திருமலையில் இருந்து செம்மரம் கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் போலீசாரால் கைது செயப்பட்டுள்ளனர்.
Samayam Tamil red sandal wood


ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டும் விவகாரம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இது தொடர்பாக தமிழர்கள் பலர் கைது செய்யப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என ஆந்திர காவல்துறை சிறையில் அடைப்பதும், குற்ற மற்றவர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என காவல்துறை சிறை பிடிக்கிறது என்றும் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனினும், செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மெரினா அதிர்ச்சி- குழந்தைகளை கத்தியால் அறுத்து, தாய் தற்கொலை முயற்சி;அடுத்த நடந்த விபரீதம்!

இந்நிலையில், திருமலையில் இருந்து திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக செம்மரங்கள் கடத்தப்படுவதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளர் வாசு தலைமையில் திருமலையிலிருந்து திருப்பதிக்கு வாகனங்கள் வரும் முதல் மலைப்பாதையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாலை 3.30 மணியளவில் வாகனத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு மாலைகளுடன் வந்த வாகனத்தை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகனத்தில் பதிமூன்று செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

அன்று தியானம், இன்று மயக்கம்..! நிர்மலா தேவிக்கு நடப்பது என்ன?

இதையடுத்து, வாகனத்தில் இருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தர்மபுரி மாவட்டம் சித்தேரியை சேர்ந்த முருகேசன் (25), அருணாச்சலம் (30), கந்தசுவாமி (27), ஓட்டுனர் பெருமாள் வேலு (35) என்றும், இதற்கு முன்னதாக இதே வழியில் ஐந்து முறை செம்மரக் கடத்தலில் அவர்கள் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ள போலீசார், ரூ.30 லட்சம் மதிப்புள்ள 13 செம்மரக்கட்டைகளை வாகனத்துடன் மறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி