ஆப்நகரம்

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை - அதிர்ச்சி தரும் காரணம்..!

அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த சகோதரர் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 27 Sep 2022, 1:19 am
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபுவின் அண்ணன் பி.கே.தேவராஜ் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களாக வயிற்று வலியால் அவதி பெற்று வந்த தேவராஜ் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil sekar babu


அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் சேகர்பாபு வீட்டில் தொடரும் இன்னல்கள் கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட விவகாரம் பரப்ரபை ஏற்படுத்தியது. தனது தந்தையால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக கூறி ஜெயகல்யாணியும் காதல் கணவர் சதிஷ்குமாரும் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்தனர். தற்போது அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில், சேகர்பாபுவின் வீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்த செய்தி