ஆப்நகரம்

பள்ளி வளாகத்தில் ஆசிரியர் செய்த அசிங்கம்; போக்சோவில் புரட்டி எடுக்கும் போலீஸ்!

ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Samayam Tamil 17 Sep 2019, 2:37 pm
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
Samayam Tamil Attack


இவருக்கும், அதே பள்ளியில் பணியாற்றி வரும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் ஜெயந்திக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நிறுத்து... சைக்கிளில் வந்த சிறுவனுக்கு அதிர்ச்சி- போலீசார் செய்த காரியத்தை பாருங்க!

இதனைக் கண்ட பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர்கள் ஊர் பொதுமக்களுடன் வந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இருவருக்கும் தலைமை ஆசிரியர் எச்சரிக்கை விடுத்தார்.

இதுபோன்ற செயலால் இருவரின் குடும்பமும் சீரழிந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மீண்டும் இதேபோன்று பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர்.

அடப்பாவிகளா, ஜீவசமாதினு மோசடியா பண்றீங்க- இருளப்பசாமியை வச்சு ஏமாற்றிய மூவர் கைது!

இதனை அறிந்த ஊர் மக்கள், பள்ளிக்கு விரைந்து ஆசிரியர் சரவணனை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் சரவணனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் தவறான செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டூவீலரை இப்படியா தாறுமாறா ஓட்றது? பல ஆயிரக்கணக்கில் அள்ளி போடப்பட்ட அபராதம்!

அதேசமயம் ஆசிரியர் சரவணனை தாக்கிய கிராம மக்கள் 10 பேர் மீது, பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி