ஆப்நகரம்

மஹாராஷ்டிராவில் கொடூரம்..! காதலை ஏற்க மறுத்த ஆசிரியையை கொளுத்திய வாலிபர்...

வட மாநிலத்தில் ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபரால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Samayam Tamil 10 Feb 2020, 9:00 pm
மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தின் ஹிங்னகாட் பகுதியைச் சேர்ந்தவர் அங்கிதா பிசூட் (24). இவர் அங்குள்ள கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் விக்கி நாகரேல் (27) என்ற வாலிபருடன் 2 வருடங்களாக நட்பாக பழகி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக அந்த வாலிபர் ஆசிரியையை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil காதலை ஏற்க மறுத்த ஆசிரியையை கொளுத்திய வாலிபர்


இதை தெரிந்துகொண்ட அங்கிதா வாலிபருடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அங்கிதா கடந்த பிப்ரவரி 3ம் தேதி வழக்கம்போல கல்லூரிக்கு சென்றார். அங்கு அங்கிதாவின் வருகைக்காக காத்திருந்த அந்த வாலிபர், அவர் வந்ததும் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அங்கிதா 'எனக்கு ஏன் தொல்லை கொடுக்கிறாய்? தயவு செய்து என்னை பின் தொடராதே என கூறிவிட்டு கல்லூரிக்குள் நுழைய முயற்சி செய்த போது; அந்த வாலிபர் தான் வைத்திருந்த பெட்ரோலை அங்கிதாவின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் கதறிய அங்கீதாவை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவருக்கு கை, கால், கழுத்து, மார்பு, முகம், வயிறு, என 40 சதவீதம் தீ காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை நாக்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சற்றுமுன் பயங்கரம்: இந்தியன் ஆயில் குடோன் அருகே தீ விபத்து... 2 பேர் பலி 3 பேர் கவலைக்கிடம்...

அங்கு 7 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 6.55 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதாகியிருந்த விக்கி நாகரேல் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் கல்லூரி வழக்கத்திற்கு முன்பு இளம்பெண் எரிக்கப்பட்டதையடுத்து தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் மஹாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி