ஆப்நகரம்

அடுத்தடுத்து 6 மாணவிகள், புதுக்கோட்டை பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை..!

புதுக்கோட்டைக்கு அருகே பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிப்பு

Samayam Tamil 19 Jan 2021, 7:39 pm
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அன்பரசன் ( 52) என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியர் ஞானசேகரன் (50) என்பவரும் கைதாகினார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
Samayam Tamil file pic


இறுதியாக மேற்கண்ட ஆசிரியர்களை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி சத்யா இருவருக்கும் தண்டனை அறிவித்தார். அப்போது, ஆசிரியர் அன்பரசனுக்கு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், மேலும் மாணவிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததர்க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து,

பாதிக்கப்பட்ட 6 மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் தலா 7 ஆண்டுகளும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, இதனை தொடர்ச்சியாக தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

'சித்ராவை ரத்தம் வரும் அளவிற்கு ஹேமந்த் அடிப்பார் ', நண்பரின் அதிர்ச்சி வாக்குமூலம்

இதனால் ஆசிரியர் அன்பரசனுக்கு மொத்தம் 49 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதுபோல, பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி