ஆப்நகரம்

நாட்டை உலுக்கிய ஆணவக்கொலை..! அம்ருதாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை...

தெலுங்கானாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட மகளின் கணவனை ஆணவ கொலை செய்த தந்தை விஷம் குடித்து தற்கொலை

Samayam Tamil 8 Mar 2020, 6:25 pm
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவை சேர்ந்த தொழிலதிபர் மாருதிராவின் மகள் அம்ருதா. இவர் தாழ்த்தப்பட்ட சமூகம் என கூறப்படும் பிரணய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகளின் காதல் திருமணத்தை விருப்பாத மாருதிராவ் தன் மகள் திருமணம் செய்து கொண்ட பிரணய்யை கொலை செய்ய திட்டமிட்டார்.
Samayam Tamil அம்ருதாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை


இந்நிலையில் கடந்த 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம் தேதி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவை பிரணய் மிரியாலகுடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனைக்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது மாருதிராவ் பணம் கொடுத்து அனுப்பிய கூலிப்படை அமிர்தாவின் கண்ணெதிரிலேயே பிரனய்யை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.


இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கில் மாருதிராவ் உள்பட கூலிப்படையை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தனக்கு ஆதரவாக சாட்சி அளித்தால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அமிர்தாவுக்கு வழங்குவதாக மாருதி ராவ் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் தெரிவித்தார்.


ஆனால் இதனை ஏற்க மறுத்த அம்ருதா நான் என் கணவர் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்.எனக்கு சொத்துக்கள் தேவை இல்லை. என் கணவரை கொலை செய்த அனைவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கொலை வழக்கில் மாருதி ராவ் 7 மாத சிறையில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமினில் வெளியே வந்தார்.

மகளிர் என்னும் நாங்கள்..!

இந்நிலையில் நேற்று கைதராபாத்தில் உள்ள ஆரிய வைசிய பவனுக்கு வந்து இரவு அங்கு தங்கியுள்ளார். இன்று காலை அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக இருப்பதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து அறையை சோதனை செய்தபோது மாருதி ராவ் எழுதிய தற்கொலைக்கான கடிதம் கிடைத்தது.

இதில் மகள் அமிர்தா தன்னுடைய தாயுடன் சென்று வசிக்க வேண்டும் என்றும் மகள் அமிர்தாவ பற்றி பல தகவல்களை அவர் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அந்த கடிதத்தை ரகசியமாக வைத்துள்ளனர். இந்நிலையில் தனது தந்தை இறந்தது குறித்து செய்தியாளரிடம் பேசிய அம்ருதா எனது தந்தை இறந்தது குறித்து தொலைக்காட்சிகளில் நான் பார்த்தேன். தன் மருமகனை கொலை செய்து விட்டோமே என்ற வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி