ஆப்நகரம்

திருமணத்தை மீறிய இளம்பெண் உறவு, நாய் பண்ணையில் அழுகிய நிலையில் சடலம்!

தெலங்கானாவைச் சேர்ந்த இளம்பெண் திருமணத்தை மீறிய உறவு காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள நாய் பண்ணை ஒன்றில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Samayam Tamil 20 Aug 2020, 7:24 pm
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாய் பண்ணை ஒன்றில் இளம்பெண்ணின் உடலை போலீசார் அழுகிய நிலையில் மீட்டனர்.
Samayam Tamil திருமணத்தை மீறிய இளம்பெண் உறவு, நாய் பண்ணையில் அழுகிய நிலையில் சடலம்!
திருமணத்தை மீறிய இளம்பெண் உறவு, நாய் பண்ணையில் அழுகிய நிலையில் சடலம்!


தெலங்கானா மாநில செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. வயது 35. இவர் தனது கணவனைப் பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் வாணிய மல்லி என்ற பகுதியில் காடின் டோமினிக்(40) என்பவருடன் வசித்து வருகிறார்.

காடின் டோமினிக் என்பவர் வானியமல்லி பகுதியில் நாய் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். பிரியங்கா குறிப்பிட்ட நாய் பண்ணையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்திருக்கிறார்.

இதற்கிடையே பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகிவிட்டார். இதையடுத்து செகந்திராபாத்தில் உள்ள பிரியங்காவின் அண்ணன் தமிழ்நாடு போலீசுக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தமிழ்நாடு போலீசார் வாணிய மல்லியில் குறிப்பிடப்பட்ட நாய் பண்ணைக்குச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அந்த நாய் பண்ணையின் பின்புறத்தில் பிரியங்கா கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அங்குக் கைப்பற்றப்பட்ட பிரியங்காவின் உடல் அழுகிய நிலையிலிருந்தது.

ஊராட்சி அலுவலகத்தில் நிருபரை கட்டி வைத்து அடித்த சாதி வெறியர்கள்!

மேலும் அந்த நாய் பண்ணையில் 10 கிலோ எடையில் வெள்ளை நிறத்திலிருக்கும் ஒருவித பவுடரும் கைப்பற்றப்பட்டது. இது போதைப் பொருளாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தெலங்கானாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்தை மீறிய உறவு காரணமாகத் தமிழ்நாட்டில் வந்து உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி