ஆப்நகரம்

அரசு அலுவலகத்தில் இரவு நேரங்களில் பெண்களுடன் பாலியல் லீலைகளில் ஈடுபட்டவர் கைது!

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தேசிய கிராமப்புற வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாணிக்கியாராவ் என்பவர், மாவட்ட அளவிலான அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்

Samayam Tamil 13 Jul 2019, 6:30 pm
தெலுங்கானா மாநிலத்தில், திட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு நேரங்களில் பெண்களுடன் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil அரசு அலுவலகத்தில் இரவு நேரங்களில் பெண்களுடன் பாலியல் லீலைகளில் ஈடுபட்டவர் கைது!
அரசு அலுவலகத்தில் இரவு நேரங்களில் பெண்களுடன் பாலியல் லீலைகளில் ஈடுபட்டவர் கைது!


தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தேசிய கிராமப்புற வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாணிக்கியாராவ் என்பவர், மாவட்ட அளவிலான அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இரவு நேரங்களில் ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்தில் மாணிக்கியாராவ், பெண்களுடன் உல்லாசமாக போலீசாருக்கு ரகசிய ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில், வழக்கம்போல் மாணிக்கியாராவ், ராய்கோடூ மண்டலத்தில் கள உதவியாளராக வேலை செய்யும் லட்சுமியை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து, உல்லாசத்தில் ஈடுபட முயன்றுள்ளார். தக்கநேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த போலீசார், திடீரென அலுவலகத்துக்குள் புகுந்தனர். போலீசார் வருவதை அறிந்த மாணிக்கியாராவ், செய்வதறியாமல் லட்சுமியை, அலுவலக கட்டிடத்தின் மேல் ஏற்றி, அங்கேயே ஒளித்து வைத்துள்ளார். திருமயம் சார் பதிவாளர் மகாலட்சுமி ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ!
திருமயம் சார் பதிவாளர் மகாலட்சுமி ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ!
இதனிடையே அலுவலம் முழுவதும் சோதனை செய்த போலீசார், கட்டிடத்தின் மேல் பதுங்கியிருந்த லட்சுமியை அதிரடியாக கீழே இறக்கி இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து, தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும் மாணிக்கியாராவ் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
தம்பியைக் கொன்றவனைக் கொன்று தம்பியின் சமாதியில் ரத்தம் தெளித்த அண்ணன்!!

அடுத்த செய்தி