ஆப்நகரம்

பறந்து சென்ற கிளி, உயிரை விட்ட சிறுமி... நீலகிரியில் சோகம்..!

நீலகிரி அருகே வளர்ப்பு கிளி பறந்து விட்டதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Aug 2020, 7:54 pm
பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் அவரவர் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பார்க்கப்படும். அவைகளுக்கு ஏற்படும் ஒரு பாதிப்போ அல்லது இழப்போ மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுவது வழக்கம். அதுபோல, இந்த சிறுமிக்கு ஏற்பட்டுள்ள முடிவு அக்குடும்பத்தினரை மட்டுமல்லாமல், நமக்கும் சோகத்தை தந்துள்ளது.
Samayam Tamil girl suicide


நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி ஜனிதா. இருவரும் தோட்ட வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி ( சனிக்கிழமை ) அன்று ராமசாமியும், ஜனிதாவும் வேலைக்கு சென்றுவிட, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்த இந்த தம்பதி, தமது மகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவர்கள் சிறுமியை கூடலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக கேரளா எல்லையில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் திடீர் மரணம் சந்தேகத்தை கிளப்பியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார் அதுகுறித்து விசாரணையில் இறங்கினர்.

அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமியின் வீட்டில் ஆசையாக ஒரு பச்சைக்கிளியை வளர்த்து வந்துள்ளனர். சம்பவம் அன்று ராமசாமியும், ஜனிதாவும் வேலைக்கு சென்று விட, வீட்டில் இருந்த சிறுமி கிளியுடன் விளையாடி கொண்டிருந்தபோது, கிளி அடைக்கப்பட்டிருந்த கூண்டினை திறந்துள்ளார். அப்போது அந்த கிளி பறந்து விட்டதாக கூறப்படுகிறது.

கோவையில் பரபரப்பு! சிறுவனிடம் சிக்கிய சிறுமி, காட்டில் நடந்த அட்டூழியம்...

இந்நிலையில், அப்பா, அம்மா ஆசையாக வளர்த்து வந்த கிளி தம்மால் தான் பறந்துவிட்டது என்பதை அவர்கள் அறிந்தால் கோபப்படுவார்கள் என பயந்துபோன சிறுமி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கியதாக விசாரணையில் தெரிந்துள்ளது.

இந்நிலையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பறந்து சென்ற வளர்ப்பு கிளிக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சிறுமியின் செயல் அக்குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி