ஆப்நகரம்

கோவை: மாணவியை காதலிக்க போட்டி.. கடத்தி சென்று சித்திரவதை.. 10 பேர் கைது...

மாணவியை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் மாணவனை கடத்தி அடைத்து வைத்து சித்திரவதை செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 16 Mar 2023, 6:28 pm
தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் இசை பூங்குன்றன் (வயது 20). இவர் கோவை ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவியை, மாணவர் அபிஷேக் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil coimbatore crime


அந்த மாணவி இசை பூங்குன்றனை காதலிப்பது தெரியவந்ததால் அபிஷேக், அந்த மாணவியை தவறாக பேசினார். இதை அறிந்த இசைபூங்குன்றன் மற்றும் அவரது நண்பர்கள், அபிஷேக்கை கண்டித்து மன்னிப்பு கேட்க வைத்தனர். இது பற்றி அபிஷேக் தனது நண்பர்களிடம் கூறினார். '

இதைத்தொடர்ந்து அபிஷேக் தனது நண்பர்களான கவுசிக் பிரவீன் (26), நவீன்குமார் (19), ஆசிக்ரகுமான் (19), பாண்டியராஜன் (21), தீபக் (19), சஞ்சய் (20) ஆகியோருடன் சேர்ந்து ஈச்சனா அருகே உள்ள இசைபூங்குன்றனின் அறைக்குச் சென்று அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவருடன் அறையில் இருந்த மாணவர் ராகுல் என்பவரையும் தாக்கினர்.

பின்னர், இசை பூங்குன்றனை காரில் கடத்திச்சென்று ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து இரவு முழுவதும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இசை பூங்குன்றன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருமகன் பாலியல் தொல்லை... சுட தண்ணி ஊற்றி கொன்ற மாமியார்..! மனைவி நிம்மதி

இது குறித்த புகாரின் பேரில்போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கவுசிக்பிரவீன், நவீன்குமார், ஆசிக்ரகுமான், பாண்டியராஜன், தீபக், சஞ்சய் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே இசை பூங்குன்றன் தாக்கப்பட்டதை அறிந்த அவரது நண்பர்களான சசிகுமார், சிரதீப், அபிஜித், கவுதம் ஆகியோர் அபிஷேக்கை அரிவாளால் தாக்கி காயப்படுத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த அபிஷேக் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், சிரதீப், அபிஜித் கவுதம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அடுத்த செய்தி