ஆப்நகரம்

கரூரில் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்து காரில் சிக்கி பலியான நபர்... பதைபதைக்கும் வீடியோ

கரூர் அருகே போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்து காரில் சிக்கி பலியான கஞ்சா வியாபாரியின் விபத்து வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

Samayam Tamil 6 Jun 2022, 2:28 pm
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பொன்னுச்சாமி என்பவர் விருதலைபட்டி என்ற கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து, குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரும் மனைவியும் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தனர்.
Samayam Tamil கரூர் கஞ்சா வியாபாரி விபத்து


இந்த நிலையில், பொன்னுச்சாமி தேனியில் இருந்து கஞ்சா வாங்கிவந்து நூற்பாலையில் வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்களுக்கு விற்று வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில் கூம்பூர் காவலர் மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் பொன்னுச்சாமியை கைது செய்து இருசக்கர வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

வாகனம் அரவக்குறிச்சி தாலுகா மஞ்சுவெளி ஊராட்சிக்குட்பட்ட எல்லப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பொன்னுச்சாமி வாகனத்தில் இருந்து குதித்து டிவைடர் தாண்டி ஓட முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த கார் அசுர வேகத்தில் பொன்னுச்சாமியை மோதி தூக்கி வீசியது. பின்னர் அந்த கார் பிரேக் பிடித்தும் நிற்காமல் பொன்னுச்சாமியின் மீது ஏறி இரங்கி நின்றது. இதில் பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரை விட்டார்.

ஷவரில் ரகசிய கேமரா... ஆயிரம் வீடியோக்கள்... அழகான பெண்களுக்கு சலுகை... உபியில் பரபரப்பு

பொன்னுசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கணவன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி கலையரசி (24) குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும், நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்து காரில் சிக்கி உயிரிழந்த பொன்னுச்சாமியின் விபத்து வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

அடுத்த செய்தி