ஆப்நகரம்

ஆபாச லிஸ்ட்டில் மனைவியையும் விட்டுவைக்காத கணவன், திருச்சி கேஷியர் வாக்குமூலம்...

திருச்சி அருகே பாலியல் வழக்கில் கைதாகியுள்ள வங்கி காசாளர் தொடர்பாக நிறைய வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக அவரது மனைவி கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Sep 2020, 8:39 pm
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். எஞ்சினியர் படித்து பத்து வருடங்களுக்கு முன்பு வங்கி தேர்வெழுதி கிளார்க்காக பணியில் சேர்ந்தவர், அதன் பின்னர் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளர் பணியில் அமர்ந்தார். இந்த நிலையில் எட்வினுக்கும், தஞ்சையைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
Samayam Tamil trichy sexual case


திருமணம் நடந்த நாளிலிருந்து எட்வின் மனைவியுடன் சரியாக நேரம் செலவழிக்காமல், மூன்றாம் நபரை போல பழகி வந்துள்ளார். அதில் சந்தேகமடைந்த அவரது மனைவிக்கு எட்வினுக்கு திருமணத்திற்கு முன்பாக நிறைய பெண்களுடன் பழக்கம் இருந்ததை தெரிந்துகொண்டார். அதற்கு ஆதாரமாக, எட்வின் பயன்படுத்தி வந்த செல்போன்களில் எட்வின் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 100 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அவருக்கு சிக்கியது.

அதை தெரிந்துகொண்ட எட்வின் மனைவி குளிப்பதை ரகசியமாக படம் பிடித்து, தன்னை பற்றி வெளியில் சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும், அவர் கணவனை குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பல மாதங்களுக்காக தலைமறைவாக இருந்த எட்வினை போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வங்கி கேஷியர் வலைக்குள் சில்லறைகளாக விழுந்த பெண்கள்..! 400 ஆபாச படங்கள் சிக்குமா?

அவரை அளித்த வாக்குமூலம், வங்கியில் வேலை பார்த்த வந்தபோது, சக பெண் ஊழியர்கள், பெண் வாடிக்கையாளர்கள் ,வீட்டருகே உள்ள முதிய வயது பெண்கள் வரையில் எட்வின் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதன் மீது ஏற்பட்ட நாட்டத்தால் மனைவியுடன் மட்டும் இருப்பதை அவர் விரும்பவில்லை என போலீசாரின் விசாரணையில் எட்வின் கூறியுள்ளார்.

ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் எட்வின் மீது புகார் தரவில்லை. இருப்பினும், எட்வினால் பல பெண்களுக்கு ஆபத்து உள்ளதென்றும், அவரை வெளியில் விடாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் அவரது மனைவி நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான மனுக்களை வழங்கி வருகிறார்.

எட்வின் குறித்த இன்னும் பல ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய பெண், வீட்டருகில் உள்ள சிறுமி மற்றும் முதிய வயது பெண்களிடம் வீடியோக்களும் அவர் செல்போனில் உள்ளதென்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி