ஆப்நகரம்

சம்மந்திகள் காதலித்து ஓட்டம்... பாதியில் நின்றுபோன திருமணம்... புலம்பும் 90ஸ் கிட்ஸ்...

தங்களது பிள்ளைளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் இரு வீட்டிலிருந்து ஆண், பெண் இருவர் காதலித்து தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2020, 7:50 pm
மணமகன் தந்தையும், மணமகள் தாயும் காதலித்து வீட்டை விட்டு ஓடி விட்டதாக வந்த தகவலை அடுத்து மணமக்களின் திருமணம் பாதிலேயே நின்ற சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சம்மந்திகள் காதலித்து ஓட்டம் பாதியில் நின்றுபோன திருமணம்


குஜராத் மாநிலம் சூரத் நகரில் சம்மந்தப்பட்ட இரு குடும்பமும் தங்களது மகன், மகளுக்கு திருமண வரம் பார்த்த பின்பு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதையடுத்து திருமணமாக போகும் மணமகன், மணமகள் இருவரும் வீட்டின் சம்மதத்துடன் வெளியில் சென்று வந்துள்ளனர்.

திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பது உறுதிதான் என்று ஆன பிறகு இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகியுள்ளது. இது வழக்கமான நடவடிக்கை என்றாலும் இவர்களை விட இருவரது பெற்றோரும் சம்மந்தி என்ற உறவில் பின்னி பிணைந்து விட்டனர்.

எஸ்ஐ வில்சன் கொலை: தீவிரவாதிகள் 2 பேர் போலீசாரிடம் ஒப்படைப்பு...

இதில் அடங்கியிருந்த இன்னொரு உண்மை என்னவென்றால் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் கல்லூரி பருவத்தில் காதலித்து வந்துள்ளனர். ஆனால் அந்த காதல் ஏதோ ஒரு காரணத்தினால் பாதியிலேயே முறிந்து போனது. தற்போது சம்மந்தி என்ற முறையில் மீண்டும் பேச தொடங்கிய இவர்களுக்கு பழைய காதல் துளிர் விட தொடங்கியுள்ளது.

மணமக்கள் ஒரு புறத்தில் கல்யாண தேதிக்காக காத்துக்கொண்டிருந்த அதே வேளையில், இந்த பழைய ஆட்டோகிராப் காதலும் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் மணமக்கள் இருவருக்கும் பிப்ரவரியில் முகூர்த்த தேதி முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அதற்குள் மணமகன் தந்தையும், மணமகளின் தாயும் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து இரு வீட்டாரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இளஞ்சோடியின் திருமணம் ரத்து ஆனதோடு, ஓடி போன தாய், தந்தை திரும்பி வருவதற்காக இரு குடும்பங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.

அடுத்த செய்தி