ஆப்நகரம்

சென்னை: நெருக்கத்தின் போது கழண்டி விழுந்த விக், இளம்பெண் போலீசில் புகார்..!

சென்னை அருகே வழுக்கை தலையை மறைத்து மனைவியுடன் குடும்பம் நடந்து வந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 13 Jan 2021, 12:05 am
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். கடந்த 5 வருடன்ங்களுக்கு முன்பு ராஜசேகருக்கு மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில், ராஜசேகருக்கு மேட்ரிமோனியல் மூலம் இளம்பெண் ஒருவர் கிடைத்ததால், முறைப்படி இரு வீட்டாரும் ஒப்புதலனின்படி திருமணம் நடந்துள்ளது.
Samayam Tamil file pic


ஆனால், திருமணம் நடந்து முடிந்ததும் மனைவியுடன் ராஜசேகர் நெருக்கமாக இருப்பதை தவிர்த்து வந்துள்ளார். அதனால், சோகமடைந்த இளம்பெண் பலமுறை ராஜசேகரிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பி வந்துள்ளார்.

இப்படியே 5 வருடங்கள் கடந்து விட்டன. இந்த நிலையில், ராஜசேகர் மனைவியுடன் நெருக்கமாக இருக்க தொடங்கினார். அப்போது, ராஜசேகரின் தலையில் இருந்த விக் சடாரென விழுந்துள்ளது. அதை கண்டு அதிர்ந்து போன ராஜசேகரின் மனைவி, ஏமாற்றப்பட்டோமே என்ற விரக்தியில் கணவனுடன் சண்டையிட்டுள்ளார்.

'ஒரே நேரத்துல மூணு பேரு', இப்ப அந்த 3 பேரும் கைது..! ஆபாச பேட்டியால் வினை

பின்னர், அவர் இதுகுறித்து, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, விக் விவகாரம் மட்டுமின்றி, வங்கி வேலை செய்து வருவதாகவும் ராஜசேகர் ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, இளம்பெண்ணும் சமரசம் ஆகாத நிலையில், போலீசார் ராஜசேகர் மற்றும் அவரது பெற்றோர் மீது மோசடி வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி