ஆப்நகரம்

கடலூர்: குழந்தை தந்தையின் சாயலில் இல்லாததால் அடித்துக் கொன்ற கொடூரன்..!

சிதம்பரம் அருகே மனைவி மீது சந்தேகப்பட்டு பச்சிளங்குழந்தையை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

Samayam Tamil 18 Feb 2021, 7:05 pm
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த காக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜிவ். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவி உள்ளார். இந்த நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவரஞ்சனி பிரசவத்துக்காக சிதம்பரம் அரசு மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil rajiv


அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையை பார்த்த தந்தை ராஜிவ், அது தன்னுடைய சாயலில் இல்லை என்று கூறி கோபித்து சென்றுவிட்டார். மேலும், மனைவி டிஸ்சார்ஜ் ஆகும் வரை மருத்துவமனைக்கும் வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆகிய சிவரஞ்சனி தனது அம்மாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த ராஜிவ், மன்னிப்பு கேட்பதை போல நடித்து அனைவரையும் ஏமாற்றி மனைவியுடன் தங்கியுள்ளார். சம்பவத்தன்று சிவரஞ்சனி குழந்தையை தூங்கவைத்துவிட்டு தானும் உறங்கியுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் தூக்கிலேற்றப்படும் முதல் பெண்..! கயிற்றை ஆர்டர் செய்த சிறை நிர்வாகம்

அப்போது, ராஜிவ் குழந்தையின் தொப்புள்கொடியை பிடித்து தரையில் அடித்ததுடன், கழுத்தை நேரிட்டது சிசுவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். தூக்கம் தெளிந்து எழுந்த சிவரஞ்சனி, குழந்தை படுகாயமடைந்த நிலையில் பேச்சு மூச்சின்றி இருப்பதை கண்டு அதிர்ந்து கதறி அழுதார்.

தொடர்ந்து, குழந்தையை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்ததில் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிவரஞ்சனி ராஜிவ் மீது ஒரத்துர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ராஜிவ் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் வலி என்றால் என்ன என்பதைக்கூட அறியாத பச்சிளங்குழந்தையை அடித்துக்கொலை செய்த கொடூர தந்தையின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி