ஆப்நகரம்

குன்றத்தூர்: பழிக்கு பழி.! நடுரோட்டில் ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை ..

குன்றத்தூர் அருகே ஜாமீனில் வெளி வந்த நபரை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 8:06 pm
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தவரை திடீரென வழி மறித்த கும்பல் அவரை சரமாரியாக வெட்ட தொடங்கியது. உயிரை காப்பாற்றிக்கொள்ள படுகாயமுடன் ஓடிய அவரை, விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் சாகும் வரை வெட்டி விட்டு அங்கிருந்து சென்றது.
Samayam Tamil 7


இந்நிலையில் சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து குன்றத்தூர் போலீசார் உட்பட, அம்பத்தூர் துணை கமிஷனர், ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு.! தற்கொலை செய்துகொள்ள முயன்ற கொலை குற்றவாளி..!

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மர்ம நபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசாருக்கு, கொலை செய்பட்டவர் குன்றத்தூர் கெலட்டிப்பேட்டையை சேர்ந்த போகபதி (42) என தெரிய வந்தது.

இவர் ஒரு வருடத்திற்கு மியூன்பு அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான பாபு என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் போகபதியின் மனைவி தாய்மை அடைந்துள்ளார்.

திருச்சி: வேட்டை நாய்களுடன் மான்களை சூறையாடிய இருவர் கைது.!

இந்நிலையில் பாபு, பெண்ணிற்கு சீமந்தம் நடத்த போவதாகவும் அது குறித்து பேசலாம் என போகபதியை வரவழைத்துள்ளார். பின்பு ஏற்கெனவே இருந்த விரோதத்தால் பாபு, போகபதியை வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவகங்கை: பாஜக பிரமுகரால் கர்ப்பமான மாணவியின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி..!

தற்போது ஜாமீனில் வெளி வந்த அவர் நேற்று நண்பரை பார்ப்பதற்காக நந்தம்பாக்கம் வழியே சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழி மறித்து வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் போகபதியை கொலை செய்து விட்டு தப்பிய நபர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி