ஆப்நகரம்

மதுரை எஞ்சினியர் மர்ம கொலை..! சாக்குப்பையில் கிடந்த சடலம்...

மதுரை அருகே பொறியியல் பட்டதாரி சாக்குமூட்டையில் சடலமாக கிடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 18 Oct 2020, 8:18 pm
மதுரை மேலூரை அடுத்த ஆட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (25). பி.இ. பொறியியல் பட்டதாரியான இவர் கான்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
Samayam Tamil file pic


இந்த நிலையில் நேற்று இவர் பணியில் இருக்கும்போது நண்பர் வினோத்பாண்டி செல்போனில் தொடர்பு கொண்டு தனது தோட்டத்துக்கு உடனே வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற மதன்குமார் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் மேலூர் பகுதியில் ஓடும் பெரியாறு பாசன கால்வாயில் சாக்கு பயில் அடைக்கப்பட்டபடி பிணம் ஒன்று மிதப்பதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை வெளியே எடுத்தனர்.

துப்பாக்கி சூட்டில் தப்பிய திமுக நிர்வாகி..! செல்போனை துளைத்த குண்டுகள்...

அது மதன்குமாரின் சடலம் என தெரிந்த பின்னர் மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மதன்குமாரின் சடலத்தில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மதன்குமாரின் நண்பரான வினோத்பாண்டியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி