ஆப்நகரம்

ஹத்ரஸ் இளம்பெண் எப்படி இறந்தார்? தடயவியல் அறிக்கை வெளியானது...

உபியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Oct 2020, 6:38 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண், நான்கு பேர் கொண்ட கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இந்த பெண்ணை குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர் துணியால் கட்டி இழுத்து சென்று பின்னர் கூட்டு பலாத்காரம் செய்ததாக ஹத்ரஸ் வட்டாரங்கள் கூறின.
Samayam Tamil hathras


மேலும், ஆங்கில ஊடகங்களில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தடய ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், உயிரிழந்த பெண்ணின் உடலில் படுகாயங்கள் இருக்கிறது.

ஆனால் அவர் பலாத்காரமோ, கூட்டு பலாத்காரமோ செய்யப்படவில்லை. விந்து தடயங்கள் காணப்படவில்லை, கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் அதன் அதிர்ச்சியால் அவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவாகரத்தின் தொடக்கத்தில் இருந்தே போலீசாரின் குறுக்கீடு இருந்ததாக கூறும் ஹத்ரஸ் வட்டாரம், பெண்ணின் சடலத்தை கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல், போலீசாரே தகனம் செய்ததாக தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள நான்கு பேரை தூக்கிலிடக்கோரி போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. கொரோனா பரவலை முன்னிறுத்தி சம்பவம் நடந்த கிராமத்தில் பொதுமக்கள் கூடாதளவுக்கு 144 தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த ராகுல் காந்தியை தடுத்த போலீசார் அவரை கீழே தள்ளியும், லத்தியால் அடித்தும் தாக்கியுள்ளனர்.

ஹத்ராஸ் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தடயங்கள் இல்லை! திடீர் திருப்பம்

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண், வாக்குமூலம் கொடுக்ககூடாதென்று அவருடைய நாக்கு துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண் வன்கொடுமைக்குள்ளாக்கப்படவில்லை என்று வந்துள்ள அறிக்கை பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி