ஆப்நகரம்

செல்போனில் பேசிக்கொண்டே கிணற்றுக்குள் விழுந்த இளம்பெண்..! ஆம்பூர் அதிர்ச்சி

திருப்பத்தூர் அருகே செல்போன் பேசிக்கொண்டே இளம்பெண் விவசாய கிணற்றுக்குள் விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Sep 2020, 2:25 pm
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள குட்டகிந்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி லட்சுனா. இந்த பெண் செல்போனில் பேசிக்கொண்டே அவரது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil ambur crime


உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லட்சுனாவை மீட்க கிணற்றில் குதித்துள்ளனர். ஆனால், ஏற்கெனெவே நீரில் மூழிகிய அவரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து, காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டு மீட்டு குழுவுடன் போலீசார் விரைந்தனர்.

பின்னர் லட்சுணவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். சம்பவம் குறித்து கேட்டறிந்த போலீசார் லட்சுனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனா முகாமில் பெண் குளிக்கும்போது நேர்ந்த அதிர்ச்சி..! கேரளாவில் அடுத்த சம்பவம்

லட்சுனாவுக்கு திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையில் வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. லட்சுனா தவறி விழுந்த கிணற்றின் சுற்று சுவர் சுமார் இரண்டு அடி வரை இருந்தும் கால் தவறி அவர் விழுந்திருப்பதாக கூறப்படுவதால் சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி