ஆப்நகரம்

சிறுமியின் கருமுட்டை விவகாரம்; சீல் வைக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் வருமானவரி சோதனை

ஈரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனையான சுதா மகப்பேறு மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் சோதனை

Samayam Tamil 9 May 2023, 7:51 pm
ஈரோட்டில் தாயுடன் தனியாக வசித்து வந்த 16 வயது சிறுமியை வற்புறுத்தி கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்திய தாய், தாயின் கள்ளக்காதலன் சையத் அலி ஆகியோர் மீது கடந்தாண்டு புகார் எழுந்தது. இந்த சம்பவம் அப்போது மாநில அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Samayam Tamil erode egg sale issue


இந்த சம்பவத்தின் பின்னணியில், புரோக்கர் மாலதி சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பின்னர் சையத் அலியும், தாயும் சேர்ந்து சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக பல்வேறு ஊர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு சேலம் பெருந்துறை ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஈரோடு பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் என்பவர் உதவி செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின்னர் உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீசில் நடந்த விஷயம் குறித்து புகார் அளித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாய், பெயிண்டர், புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரை போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட பின்னர் மருத்துவ பணிகள் இயக்குனரக இணை இயக்குனர் விஸ்வநாதன் கூறிய தகவல் பகீர் கிளப்பியது.

அவர், இந்த சம்பவத்தில் ஈரோடு மட்டுமின்றி பிற ஊர்கள், மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது. அங்கும் கருமுட்டை விற்பனை நடந்துள்ளது. முழுமையாக விசாரித்த பின்னரே முழு விவரம் வெளியே தெரியவரும். சிறுமி தற்போது நல்ல நிலையில் உள்ளார்.முழுமையான விசாரணை முடிந்த பிறகு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை நடந்து இருந்தால் மருத்துவமனை உரிமையை ரத்து செய்யப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்த ஈரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான சுதா மகப்பேறு மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில் சுதா மகப்பேறு மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி