ஆப்நகரம்

நித்தியின் கைலாசா சென்ற முக்கிய சீடர் மர்ம மரணம்..! சிஷ்யை பகீர்...

குஜராத் ஆசிரமத்தில் இருந் வந்த சதிஷ் என்ற சீடர் கைலாசாவுக்கு செல்வதாக கூறியுள்ளார். சில மாதங்கள் கழித்து நேபாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.

Samayam Tamil 17 Jan 2020, 3:47 pm
குஜராத் மாநிலம் அகமதாப்பத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஆதின வாசியாக இருந்தவர் சதிஷ் செல்வகுமார் என்கிற ஸ்ரீ ஈஸ்வர பிரியானந்தா. குஜராத்தில் உள்ள யோகினி பீட நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்பை வகித்த வந்த இவர் பிராணபிரியாவின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் குஜராத் ஆசிரமத்தில் இருந்த சதிஷ் செல்வகுமார், நித்யானந்தா இருக்கும் கைலாசவுக்கு செல்லவிருப்பதாக கூறியுள்ளார்.
Samayam Tamil நித்தியின் கைலாசா சென்ற முக்கிய சீடர் மர்ம மரணம்


சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த மாயமான அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இந்திய நேபாள எல்லைக்கு அருகில் சடலமாக கிடப்பதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த நித்யானந்தா சீடர்களும், பக்தர்களும் சதீஷின் உடலை பெற்று கொண்டு வாரணாசி ஆசிரமத்துக்கு எடுத்து சென்றனர்.

கைகள் கட்டி, முகத்தை மூடி டிக்டாக்... மூச்சுத்திணறி பலியான 17 வயது சிறுவன்...

சதீஷின் மரண செய்தியை அவரது குடும்பத்துக்கு கூட தெரிவிக்காமல் ஆசிரம வாசிகளே தகனம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சம்பவம் அறிந்து ஆசிரமத்துக்கு வந்த சதீஷின் தாய் வனஜா, சீடர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சதீஷின் மரணத்திலிருந்து உடல் தகனம் வரைக்கும் நித்தியின் கண் அசைவாக கூட இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.

நித்யானந்தா மீது பாலியல், கடத்தல், போதை மருந்து விவகாரம் என பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சூடு பிடித்திருக்கும் வழக்காக இருப்பது ஜனார்த்தன் ஷர்மாவுடைய மகள்களை கடத்தியதாக கூறப்படுவதுதான். இந்த வழக்கு அகமதாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தன்னுடைய மகள்களை நித்தியானந்தா கடத்தியுள்ளார் எனவும், அவரால் தங்கள் மகள்களுக்கு ஆபத்து உள்ளதெனவும் ஜனார்த்தன் ஷர்மா தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் அவருடைய மகள் லோப முத்ரா தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரிக்கையில் ' நாங்கள் ஜமைக்காவில் இருக்கிறோம். எங்களை யாரும் கடத்தவில்லை. தேவையின்றி நித்யானந்தா ஆசிரமத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் என் தந்தை பொய்யான வழக்குகளை தொடருகிறார். உண்மையில் அவரை நினைத்துதான் எனக்கு அச்சமாக உள்ளது. அவர் நித்யானந்தாவின் செயலாளராக இருக்கும்போது நிறைய நிதி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்' என இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி