ஆப்நகரம்

வேலைக்காரர் மனைவி மீது நீண்ட நாள் ஆசை..! கோவையில் பரபரப்பு...

கோவையில் மலைவாழ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை தட்டிக்கேட்ட தோட்ட உரிமையாளரை கத்தியால் குத்தியவர் கைது.

Samayam Tamil 22 Jul 2020, 2:08 pm
கோவை மாவட்டம் நரசீபுரம் அருகே தோட்டத்தை குத்தைக்கு எடுத்து ராமசாமி (37) என்பவர் வெங்காயத்தை பயிரிட்டுள்ளார். அருகிலுள்ள பட்டியார்பதி என்ற மலைவாழ் கிராமத்திற்கு சென்ற ராமசாமி அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஒருவரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
Samayam Tamil accused


அப்போது 24 வயதுள்ள அப்பெண் சப்தமிட அருகிலிருந்தவர்கள் ராமசாமியை பிடித்து அடித்து உதைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கார்த்திகேயன், ராமசாமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கோபமடைந்த ராமசாமி கார்த்திக்கை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த ஆலந்துறை காவல்துறையினர், கார்த்திகேயனை தாக்கியதை ஒரு வழக்காகவும், மலைவாழ் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதற்கு பாலியல் வன்கொடுமை, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனி வழக்கு என இரு வழக்காக பதிவு செய்து ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமசாமியும் தோட்டமும், கார்த்திகேயன் வீடும் அருகருகே உள்ள நிலையில், கார்த்திகேயன் தோட்டத்தில் ட்ரக் ஓட்டுனராக மலைவாழ் பெண்ணின் கணவர் பணியாற்றி வருகிறார். அப்போது, அவ்வப்போது தனது கணவரை பார்க்கும் வரும்போது பாதிக்கப்பட்ட பெண்ணை ராமாசாமி பார்த்து வந்துள்ளார்.

4 வயது சிறுமி உள்பட 2 பேர் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை!

2 ஆண்டுகளாகவே அந்த பெண் மீது தவறான எண்ணத்தில் ராமசாமி பார்த்து வந்துள்ளதும், சம்பவம் அன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, குடிபோதையில் தவறாக நடக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி