ஆப்நகரம்

கடலூரில் 2 குழந்தை உட்பட 4 பேர் எரித்துக்கொலை... நடந்தது என்ன..? முழு விவரம்

கடலூரில் இரு குழந்தைகள் உட்பட 3 பேரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 8 Feb 2023, 4:03 pm
கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவரது மனைவி தமிழரசி (31). இவர்களுக்கு ஹாசினி (1) என்ற குழந்தையும், 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர். தமிழரசியின் தங்கை தனலட்சுமி, அவரது கணவர் சத்குரு. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
Samayam Tamil cuddalore family murder


இதில் சத்குரு, தனலட்சுமி ஆகியோர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சத்குருவிற்கும், தனலட்சுமிக்கும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனலட்சுமி பிரகாஷின் வீட்டிற்கு வந்தார். அங்கு பிரகாஷின் அம்மா செல்வியுடன் வீட்டில் தங்கினார்.

இதன் பின்னர் இன்று காலை பிரகாஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமியிடம் சத்குரு போனில் தொடர் கொண்டார். பின்னர் சத்குருவுக்கும் தனலட்சுமிக்கும் இடையே உள்ள பிரச்சனை காரணமாக சத்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் சிறிது நேரத்தில் பிரச்சனை பெரிதாக உருவானது. உடனே சத்குரு தான் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் எடுத்து வீட்டில் இருந்தவர்கள் மீது ஊற்றிவிட்டு வீட்டை பூட்டி கொண்டு தீ வைத்தார்.

Breaking: கடலூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை..!

பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் தீயினால் புகை மண்டலமாக காணப்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கடலூர் முதுநகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த முதுநகர் போலீசார் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். இந்த தீ விபத்தில் தமிழரசி, குழந்தை ஹாசினி மற்றும் ஆறு மாத ஆண் குழந்தை, சத்குரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த தனலட்சுமி, தனலட்சுமியின் அம்மா செல்வி ஆகியோரை ஆபத்தான நிலையில் போலீசார் மீட்டு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி