ஆப்நகரம்

கணவனின் சடலத்துடன் 4 நாட்கள் பேசிக்கொண்டிருந்த மனைவி..! செங்கல்பட்டில் அதிர்ச்சி

செங்கல்பட்டு அருகே கணவனின் சடலத்துடன் நான்கு நாட்களாக வசித்து வந்துள்ளார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.

Samayam Tamil 22 Nov 2020, 7:43 pm
செங்கல்பட்டு மாவட்டம் செந்நெரியை அடுத்த புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (62). இவர் பஞ்சாங்கம் பார்க்கும் தொழிலை செய்து வந்தவர். 6 ஆண்டுகள் முன்பு தாமோதரனின் மனைவி இறந்துவிட்டதையடுத்து திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
Samayam Tamil தாமோதரனின் சடலம்


இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக முடங்கியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி அதுகுறித்து அக்கம்பக்கத்தில் யாரிடமும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தாமோதரன் நான்கு நாட்களுக்கு முன்னர் இறந்துள்ளார்.

ஆனால், அது தெரிந்தும் கூட ராஜேஸ்வரி கணவரின் சடலத்தருகே அமர்ந்து பேசுவதும், உறங்குவதுமாக இருந்து வந்துள்ளார். இதனிடையே தாமோதரனின் உடல் அழுகி துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. அக்கம் பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அவர்களது வீட்டில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரியின் வீட்டுக்குள் சென்று சோதனையிட முயற்சித்தனர்.


மோசமான முதலிரவு, கணவனின் கண்முன்னே பாலியல் கொடுமைகள்: ஜெயமாலா வாக்குமூலம்

அப்போது, அவர்களை ராஜேஸ்வரி வீட்டுக்குள் விடாமல் கையில் இருந்தவற்றை வீசி துரத்தியுள்ளார். அதனை மீறி உள்ள சென்ற உள்ளூர் வாசிகள், தாமோதரனின் அழுகிய உடலை கண்டு அதிர்ந்து போயினர். உடனே செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பணியாளர்கள் உதவியுடன் தாமோதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனநலம் பாதித்த ராஜேஸ்வரியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி