ஆப்நகரம்

கோவையில் துப்பாக்கி கலாச்சாரம்? இருவர் கைது... அச்சத்தில் பொது மக்கள்

துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்து வருகிறதோ என்று கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Samayam Tamil 30 Nov 2021, 6:59 pm
கோவையில் உள்ள போலீசாருக்கு துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் சுற்றுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கோவை இரத்தினபுரி போலீசார் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
Samayam Tamil coimbatore gun culture


அப்போது அந்த விடுதியில் இருவர் போலியான முகவரி கொடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில் ஒருவர் பெயர் சாகுல்ஹமீது, மற்றும் அவரது நண்பர் சக்தி என்பதும் தெரியவந்தது.

மேலும், போலீசார் அவர்களிடம் விசாரித்ததில் இவர்கள் அந்த தங்கும் விடுதியில் இரண்டு அறைகள் எடுத்துள்ளது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய சோதனையில் அந்த அறையில் இருந்து இரண்டு ஏர்பிஸ்டல் துப்பாக்கி, பத்து சிலிண்டர்கள், ஒரு பட்டன் கத்தி, மற்றும் பால் புல்லட் ஒரு பாக்கட் வைத்திருந்ததும் தெரியவந்தது.

மதுரையில் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த காவலர் சஸ்பெண்ட்..!

அவற்றை பறிமுதல் செய்த இரத்தினபுரி காவல்துறையினர், தங்கும் விடுதி காந்திபுரம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், அந்த காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது, சக்தி, மற்றும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஒப்படைத்தனர். காந்திபுரம் போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கோவையில் கடந்த சில மாதமாக கொள்ளை,வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்து வருகிறதோ என்று கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி