ஆப்நகரம்

8 ஆண்டுகள் பணியாற்றிய போலீஸ் மோப்ப நாய் டோனி இறந்தது..!

சென்னையில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய போலீஸ் மோப்ப நாய் டோனி இருதய கோளாறு காரணமாக இறந்தது.

Samayam Tamil 11 Dec 2022, 1:20 pm
சென்னை காவல் துறையில் மோப்ப நாய் பிரிவில், டோனி என்ற மோப்ப நாய் , கடந்த மே மாதம் 2ம் தேதி, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி அன்று பிறந்து 45 நாட்களே ஆன டோனி , மோப்ப நாய் பிரிவில் சேர்க்கபட்டு சிறந்த துப்பறிவாளராக பணியாற்றி வந்தது.
Samayam Tamil chennai crime


கொலை, கொள்ளை மற்றும் திருட்டு என 35 வழக்குகள் விசாரணைக்கு உதவியாக டோனி இருந்தது. 2017ம் ஆண்டில் மாநில அளவில் காவல் துறையில் திறன் போட்டியில் பங்கேற்று டோனி வெள்ளிப்பதக்கம் வென்றது.

2020ம் ஆண்டில், கெனல் கிளப் மீட்டில் இரண்டாம் இடம் பிடித்தது. இந்த நிலையில் இருதய கோளாறு காரணமாக டோனி நேற்று முன்தினம் இறந்தது.

ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் , டோனியின் சிறப்பான சேவைகளை நினைவு கூர்ந்தார். பயிற்சியாளர் தலைமை காவலர் தனசேகர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ,20832 மலர் தூவி மரியாதை செய்தனர். அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழுங்க , டோனிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அடுத்த செய்தி