ஆப்நகரம்

திருவாரூர் 'பப்ஜி ' காதல்: ப்ரோ பிளேயரை கரம் பிடித்த நூப் கேர்ள்..!

திருவாரூர் அருகே பப்ஜி கேம் மூலம் காதலர்களான ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 7:03 pm
முகநூல் காதல், டிக்டாக் காதல் என காலத்திற்கேற்றாற்போல் காதலும் மாற துவங்கியுள்ளது. அதலினும் ஒருபடிமேல் சென்று தற்போது குமரியில் பப்ஜி விளையாட்டு மூலம் காதலில் இணைந்துள்ளது குமரி இளம் ஜோடி.
Samayam Tamil tiruvarur pubg love marriage


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளை சேர்ந்தவர் சசிகுமார். மரவியாபாரியான இவரது இரண்டு பெண்குழந்தைகளில் இளைய மகளாக 20வயதான பபிஷா என்பவர் திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கல்வியை இடையிலேயே விட்டுவிட்டார்.

தொடர்ந்து மொபைல் போனில் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் மணிகணக்கில் விளையாடி கொண்டிருந்தார். பெற்றோரும் மகள் ஏதோ விளையாட்டில் தான் ஆர்வமாக இருக்கிறார் என்ற எண்ணத்தில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் விளையாட்டோ காதலாக மாறியது .


திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகனான 24வயதான அஜின் பிரின்ஸ் என்பவருடன் பப்ஜியுடன் காதலாக மாற துவங்கியது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பபிஷா காரில் காத்திருந்த அஜின் பிரின்ஸுடன் தலைமறைவானார்.

இதையடுத்து மகளை காணவில்லை என சசிகுமார் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காதல் ஜோடிகளை தேடும் பணியை துவங்கினர்.

போலீசார் தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள் 22ஆம் தேதி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் ,இந்நிலையில் காவல்நிலையம் வந்த அஜின் பிரின்ஸின் பெற்றோர் மகனின் காதலியை அகற்றுவதில் குறிகோளாக இருந்தனர். மேலும், அஜின் பிரின்ஸின் உறவினராக காவல்துறையில் மது விலக்கு பிரிவில் துணை கண்காணிப்பாளராக இருக்கும் ஒருவர் மூலம் பபிஷா குடும்பத்தினருக்கு மிரட்டலும் விடுக்க ஆரம்பித்தனர்.

சென்னையில் கணவருக்கு தெரியாமல் தனிமையில் ஒதுங்கும் பெண்களுக்கு வலை! பகீர் சம்பவம்

ஆனால் காதலர்களோ சேர்ந்து வாழ்வதிலேயே குறிகோளாக இருந்தனர். இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினரும் அவர்களை சேர்த்து வைக்க நினைத்தனர். இதையடுத்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் அருகிலுள்ள ஆலயத்தில் இருவரும் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்ட பின்னர் அஜினின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி