ஆப்நகரம்

கூலி வேலைக்கு சென்ற பள்ளி மாணவன்... உடலில் காயங்களுடன் மரணம்... கடலூரில் மர்ம வழக்கு

இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சடலத்தை வாங்க மறுத்து விருதாச்சலம் புவனகிரி சாலை மறியல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு.

Samayam Tamil 11 Jun 2022, 5:54 pm
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தை சார்ந்த செந்தில் என்பவரின் மகன் ஜெயசூர்யா (17). இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை முடித்துவிட்டு விடுமுறையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சீராப்பாளையத்தில் சர்க்கரை ஆலையில் கூலி வேலைக்காக சென்று வந்தார்.
Samayam Tamil கடலூர் சிறுவன் மர்ம மரணம்
கடலூர் சிறுவன் மர்ம மரணம்


இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனது அறையில் உடம்பில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும், அவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஜெயசூர்யாவின் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விருதாச்சலம் புவனகிரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த சேத்தியாதோப்பு காவல் துறையினர் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வெளிநாட்டில் இருப்பவருக்கு பயிர் கடன் வாங்கி மோசடி; அதிமுக நிர்வாகி மீது பரபரப்பு புகார்

பள்ளி மாணவன் வேலைக்கு கூலி வேலைக்கு சென்ற வந்த சூழலில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி