புறம்போக்கு நிலம்
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரையை அடுத்த நெல்லிமூடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜன் (45), அம்புலி (40) தம்பதி. இவர்களுக்கு ராகுல் (23) மற்றும் ரஞ்சித் என இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜன் ஒரு வருடத்துக்கு முன்பு தனது தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் நெட்டா தோட்டம் என்ற பகுதிக்கு குடும்பத்துடன் வந்துவிட்டார். அங்கு இருந்த 3 சென்ட் புறம்போக்கு இடத்தில் சிறிய கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார்.
வினையாய் வந்த வசந்தா
இந்நிலையில், ராஜனின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வசந்தா என்பவர் அந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி, ராஜன் சட்ட விரோதமாக எங்களது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், திருட்டு மின்சாரம் எடுத்துள்ளதாகவும் விஜிலென்ஸ் அலுவலகம் மற்றும் மின்சார வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், வசந்தாவின் குடும்பம் ராஜனிடம் அடிக்கடி தகாரில் ஈடுபட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலம் என்பதால் அங்கு வசிப்பதற்கு வசந்தா ஏன் இடையூறு செய்ய வேண்டும் என்ற ராஜன் தரப்பு பதிலளித்துள்ளது. மேலும், வசந்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
ஜப்தி செய்யுங்கள்
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதனையடுத்து, வீட்டை ஜப்தி செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ராஜன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையில், கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி ராஜனின் வீட்டுக்கு வந்த போலீசார், ராஜனின் வீட்டை ஜப்தி செய்ய முயற்சித்தனர். அப்போது, ஜப்தி நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மறு உத்தரவு வரும்வரை காத்திருக்குமாறு ராஜன் கெஞ்சியுள்ளார்.
கதறிய கூலி தொழிலாளி
தொடர்ந்து பின் வாங்காத போலீசார் ராஜன் குடும்பத்தை வெளியேறும்படி கூறியுள்ளனர். அப்போது ராஜன் தன்மீதும், மனைவி அம்புலி மீதும் பெட்ரோலை ஊற்றி கையில் இருந்த லைட்டரை பற்ற வைத்துள்ளார். ஆனால், உடலில் தீ வைத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு எதிரே இருந்த போலீசார் லைட்டரை தட்டிவிட முயற்சித்தனர். அப்போது, லைட்டரின் தீ எதிர்பாராதவிதமாக ராஜன் மீதும் அம்புலி மீதும் பற்றிக்கொள்ளவே இருவரும் கதறி துடித்தனர். பின்னர் உடலில் பலத்த தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 28 ஆம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்தனர். கடைசியாக ராஜன் அளித்த வாக்குமூலத்தில், '' சம்பவம் நடந்த அன்று போலீசாரை அச்சுறுத்தவே உடலில் பெட்ரோலை ஊற்றியதாகவும், எதிர்பாராத விதமாக தீ பற்றிக்கொண்டதாகவும் கூறியிருந்தார். இதற்கிடடையில், ராஜனின் வீட்டை ஜப்தி செய்வதற்கு கேரளா நீதிதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தற்கொலை சம்பவத்திற்கு, போலீசாரே காரணம் என்று ராஜனின் மகன் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜப்தி செய்ய தடை
இந்நிலையில் ராஜன் மீது கொடுத்த வழக்கை பக்கத்துக்கு வீட்டு வசந்தாவும் வாபஸ் பெற, தாய், தந்தையை இரு மகன்களும் அம்மா, அப்பாவின் உடல்களை இந்த இடத்திலியேயே தகனம் செய்யவும், போலீசாரை மீது நடவடிக்கை எடுக்கவும் கேரளா அரசை வலியுறுத்தினார். இதுகுறித்து ராஜனின் தாயார் கூறியதாவது, இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் என் மகனை எனது வீட்டில் இருந்து வெளியே அனுப்பிருக்கமாட்டேன். வசந்தா என்பவர் அளித்த புகார் நெருக்கடியால் என் மகன், மருமகள் உயிர் போய்விட்டது'' என கண்கலங்கினார். இதையடுத்து, ராஜனின் மகன்கள் வாசிக்க வீடு கட்டி தரப்படும் என்று உறுதியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.