ஆப்நகரம்

மாமியாரின் தகாத உறவு, மருமகனை கொன்ற காமம்... பொள்ளாச்சியில் பயங்கரம்

பொள்ளாச்சி அருகே மாமியாரின் தகாத உறவை தட்டிக் கேட்ட மருமகன், மகளுக்கு கத்திக்குத்து

Samayam Tamil 19 Feb 2021, 4:20 pm
பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ராணி. கணவர் இறந்து விட்ட நிலையில் இவருக்கு பூங்கொடி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக ராணி அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவருடன் தகாத உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil தண்டபாணி


இதை மகள் பூங்கொடி மற்றும் அவரது கணவர் துரை இருவரும் கண்டித்துள்ளனர். இதனால் அடிக்கடி தண்டபாணிக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று ராணியும், தண்டபாணியும் நெருக்கமாக இருந்ததை மகள் பூங்கொடி அவரது கணவர் துரையும் பார்த்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தண்டபாணி இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் விழுந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

'கிறுக்கன்' என்று கூறிய மகள் கொடூர கொலை, விரக்தியில் தந்தை தற்கொலை... சேலத்தில் சோகம்

ஆனால், செல்லும் வழியிலேயே துரை பரிதாபமாக உயிரிழந்தார். பூங்கொடி உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும், தப்பியோட முயன்ற தண்டபாணியை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உடுமலை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ராணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமியாரின் தகாத உறவை தட்டிக் கேட்ட மருமகன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி