ஆப்நகரம்

மகனின் தோழியை திருமணம் செய்த அப்பா படுகொலை..! தென்காசியில் பரபரப்பு

தென்காசி அருகே இரண்டாம் மனைவிக்கு அதிக சொத்து எழுதி வைத்ததாக முதல் மனைவியின் மகன் தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Nov 2020, 8:21 pm
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (70). இவரது முதல் மனைவியின்மகன் திருக்குமரன் (43). இவர் திருமணமாகி புலவனூர் அருகே வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மகன் திருக்குமரனின் பள்ளி தோழியான சண்முகசுந்தரி (43) என்பவரை தங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
Samayam Tamil தங்கராஜ்


இதனால், தங்களுக்கு சேர வேண்டிய சொத்தை எழுதி தருமாறு திருக்குமரன் தங்கராஜிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், தங்கராஜ் கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கராஜ் முதல் மனைவியை பிரிந்து விட்டு சண்முகசுந்தரியிடம் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, நிலங்களை பிரித்து எழுத முடிவு செய்த தங்கராஜ் முதல் மனைவிக்கு 15 ஏக்கர் நிலத்தையும், இரண்டாவது மனைவிக்கு 25 ஏக்கர் நிலத்தையும் எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் மகன் திருக்குமரன், முதல் மனைவிக்கு வெறும் 15 ஏக்கரை எழுதிக்கொடுத்து விட்டு இரண்டாவது மனைவியான எனது பள்ளி தோழிக்கு 25 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளாயே என்று தங்கராஜிடம் சண்டையிட்டுள்ளார்.

கண்ணை மூடிக்க, 15 வயசு மாணவியை காருக்குள் பலாத்காரம் செய்த ஆசிரியர்..!

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தங்கராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார் திருக்குமரன். தந்தையை மகனே வெட்டி கொலை செய்த விவகாரம் கிராமம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விவகாரம் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து தங்கராஜின் உடலை பிரேத பரிசோதனை நடத்த மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தங்கராஜ் பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி