ஆப்நகரம்

வாத்தி ரைடில் தப்பிய வேலூர் டவுசர் கொள்ளையர்கள்..! எஸ்பிஐ கொள்ளையர்களா?

வேலூர் அருகே போலீசார் துரத்தி சென்ற நிலையில் டவுசர் கொள்ளையர்கள் தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Jun 2021, 7:17 pm
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் நள்ளிரவில் 407 மினி வேனில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் உடை எதுவும் அணியாமல் டவுசர் மட்டுமே அணிந்து கொண்டு வந்துள்ளனர்.
Samayam Tamil போலீஸ் ஜீப்


அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை கண்டு பிடிக்க முயன்றபோது வேனில் வேகமாகச் சென்றவர்கள் காட்பாடியை நோக்கி சென்றனர்.

காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் தெரிவிக்கப்ட்டதும், அவர் போலீஸ் ஜீப்பில் அந்த கும்பலை துரத்திக் கொண்டு சென்றார். அந்த கும்பலை கம்மவார் புதூர் அருகே மடக்க முயன்ற போது காவல் துறையினர் மீது கற்களை வீசியும் வேகமாக வந்து ஜீப் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

படுக்கையறை, குளியலறை வீடியோக்கள்... நடிகையுடன் ஃபன் பண்ணியிருக்கும் மாஜி அமைச்சர்..!

அதன்பின்னும் காவல்துறையினர் அவர்களை துரத்திய போது அவர்கள் சேர்க்காடு வழியாக ஆந்திர மாநிலத்திற்கு தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் இந்த கும்பல் ஏடிஎம் இயந்திரங்களை முழுவதுமாக பெயர்த்து எடுத்துக் கொண்டு செல்லும் கும்பல் ஆக இருக்கலாம் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி