ஆப்நகரம்

மூன்று தலைமுறை துயரம்... 'சாவை இப்படித்தான் எடுத்துட்டு போறோம்'... திருவாரூரில் ஓர் கிராமம்

திருவாரூரில் ஒரு கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் ஆற்றில் இறங்கி செல்லும் ஊர் மக்கள்

Samayam Tamil 26 Jun 2022, 2:36 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது. அன்னியூர் என்ற ஊராட்சி . இந்த ஊராட்சியில் பாகசாலை என்ற கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இந்த 50 குடும்பங்களில் உள்ளவர்களுக்கு உரித்தான சுடுகாடு ஆற்றின் மறு கரையில் உள்ளது.
Samayam Tamil crime


இந்த சுடுகாட்டுக்கு செல்ல வேண்டுமானால், கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது ஆற்றில் இறங்கியும், மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும்போது ஆற்றில் இறங்கி நீந்தி இறந்து போனவர்களை கொண்டு சென்று அங்கு தகனம் செய்கிறார்கள்.

தொடர்ந்து மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக இறந்தவர்களை இவ்வாறு தான் நாங்கள் அங்கு எடுத்துச் சென்று தகனம் செய்கிறோம் என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

நடத்தையில் சந்தேகம்... மனைவியை கட்டிப்போட்டு வெறி தீர்த்த கொடூர கணவன்... கடலூர் திகில்

உடனடியாக அரசு இதனை கவனத்தில் கொண்டு ஒரு சிறிய அளவிலான பாலமாவது அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

அடுத்த செய்தி