ஆப்நகரம்

தாயின் சடலத்துடன் 10 ஆண்டுகள் வசித்து வந்த பெண்..! அதிர்ச்சி காரணம்

ஜப்பானில் தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்த பெண்

Samayam Tamil 31 Jan 2021, 5:53 pm
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் உள்ள நகராட்சி வீட்டு வசதி குடியிருப்பில் வசித்து வந்தவர் யூமி யோஷினோ (48). இவர் நீண்டகாலமாக வீட்டு வாடகையை ஒழுங்காக கட்டி வராததால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று அந்த வீட்டை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் சென்றுள்ளார்.
Samayam Tamil file pic


அப்போது, வீட்டினுள் இருந்த ஃப்ரீஸரை திறந்தபோது பணியாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஃப்ரீசரில் வயதான பெண்ணின் சடலம் விறைத்துக் கொண்டிருக்கவே பணியாளர் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசாரும், தடயவியல் வல்லுனர்களும் வந்தனர்.

சம்பவம் குறித்து விசாரிக்க யூமி யோஷினோவை அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்ததில், ஃப்ரீசரில் இருந்த சடலம் அவரது தாய் எனவும், அவரை இறந்து 10 ஆண்டுகள் ஆவதாகவும் தெரிய வந்தது. மேற்படி விசாரணை செய்ததில், தாய் இறந்த செய்தி வெளியில் தெரிந்தால் தானும் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவோம் என்ற பயத்தில் அவர் தனது தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக அந்த ஃப்ரீசரில் அடக்கி வைத்துள்ளார்.

பிணவறையில் சித்ராவின் உடல், இயக்குனர் கூறும் காரணம்..!

மேலும், அவர்கள் குடியிருந்த வீட்டின் ஒப்பந்தம் இறந்த பெண்ணின் பெயரில் இருப்பதால், விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் யூமி யோஷினோவை கைது செய்தனர். வாடகைக்கு பயந்து தாயின் சடலத்துடன் 10 ஆண்டுகளாக வசித்து வந்த பெண்ணை கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அடுத்த செய்தி