ஆப்நகரம்

'என் வீட்டு பொண்ணயேவா'..! நண்பனையே தீர்த்துக்கட்டிய இளைஞர்கள்... விழுப்புரம் பயங்கரம்

விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் மரண வழக்கில் காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.

Samayam Tamil 21 Feb 2023, 1:52 pm
அண்ணன் மகளை காதலித்ததால் நண்பனை இளைஞர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் விழுப்புரம் பகுதியை பதற வைத்துள்ளது.
Samayam Tamil the young man was beaten to death by his friends in a love affair in villupuram
'என் வீட்டு பொண்ணயேவா'..! நண்பனையே தீர்த்துக்கட்டிய இளைஞர்கள்... விழுப்புரம் பயங்கரம்


விழுப்புரம் பயங்கரம்

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ராஜன் என்பவர் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு பதித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த கல்லூரி மாணவர் ராஜனை அவரது சக நண்பர்கள் வெளியே சென்று மது குடிக்கலாம் எனக் கூறி அழைத்து சென்றுள்ளனர்.

மது திட்டம்

பின்னர், மது அருந்தி கொண்டிருக்கும் போது மது போதையில் இருந்த கல்லூரி மாணவர் ராஜனின் தலையில் செங்கல்லை கொண்டு தாக்கி உடனிருந்த நண்பர்களே அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடித்துக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை

இதனை தொடர்ந்து ராஜனை வீட்டில் இருந்து அழைத்து சென்ற அவரது நண்பர்களான இரண்டு பேரை காணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தனது அண்ணன் மகளை ராஜன் காதலித்து வந்ததாகவும், காதலை கைவிடுமாறு பலமுறை வலியுறுத்தியும் தொடர்ந்து தனது அண்ணன் மகளை காதலித்து வந்ததால் ஆத்திரமடைந்து ராஜனை நைசாக பேசி அழைத்து சென்று குடிக்க வைத்து மதுப்போதையில் இருந்த போது அருகில் இருந்த செங்கல்லை எடுத்து தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும் ராஜனின் நண்பர் சத்தியராஜ் போலீசாரிடம் தெரிவித்தார்.

இருவர் கைது

இதனையடுத்து காதல் விவகாரத்தில் சக நண்பனை வெட்டிக் கொலை செய்த ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ், விழுப்புரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த லாலி கார்த்திக் என்கிற சரவணன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து காணை போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை சக நண்பர்களே தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி