ஆப்நகரம்

கடைசி 'டீ' இதுதான் என தெரியாமல் இறந்த வாலிபர்... எமனாக வந்த பேருந்து.. சென்னை சோகம்

பேருந்து தானியங்கி கதவு மோதியத்தில் மழை நீர் வடிகாலில் விழுந்து சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Feb 2023, 4:52 pm
சென்னை, திருவொற்றியூர் பகுதியில், பேருந்தின் தானியங்கி தானாக கதவு திறந்து மோதியதில், மழை நீர் வடிகாலில் விழுந்த வாலிபர் பலியானார். பெண் ஒருவர் காயமடைந்தார்.
Samayam Tamil youth death


தூத்துக்குடி மாவட்டம், அழாகபுரி சேர்ந்த வெங்கடேசன்(24). இவர், சென்னை திருவொற்றியூர் காவல் நிலையம் அருகில் மளிகை கடை ஒன்றில் ஆறு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

சில தினத்துக்கு முன்பு சொந்த ஊரு சென்றிருந்த வெங்கடேசன், இன்று காலை சென்னைக்கு வந்தார். பின்னர் வழக்கம் போல மளிகை கடைக்கு வேலைக்கு வந்த வெங்கடேசன் இடைவேளையில் அங்குள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த பேருந்தில் தானியங்கி கதவு தானாக திறந்தபடி இருந்தது. அதை கவனிக்காமல் டீ குடித்துக்கொண்டிருந்த வெங்கடேசனை அருகே வந்த பேருந்தின் கதவு மோதியது. இதனால் அங்கிருந்த மழை நீர் வடிகாலில் விழுந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தமிழக மீனவர் விரல்களை வெட்டி தாக்குதல்; நடுக்கடலில் இலங்கை கொள்ளையர்கள் அட்டூழியம்

மேலும் இந்த விபத்தில் திருவொற்றியூர், தியாகராயபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்தார். இந்நிலையில், கதவு திறந்திருப்பதை கவனிக்காமல் இருந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் தப்பிக்க முயற்சித்தார். அவரை, திருவொற்றியூர் போலீசார் விரட்டி சென்று, பிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் யுகேந்திரன் என்பதும் அப்போது அவர் போதையில் இருந்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தண்டையார் பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, வெங்கடேசன் உடலை கைப்பற்றி, விசாரனை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி