ஆப்நகரம்

அடுத்தவர் மனைவியுடன் ஊர் சுற்றிய வாலிபர் வெட்டிக்கொலை; விசாரணையில் பகீர்..!

சென்னை புழல் பகுதியில் திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்த வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

Samayam Tamil 31 Jan 2023, 6:09 pm
சென்னை, புழல் அடுத்த லட்சுமிபுரம், குமரன் தெருவை சேர்ந்தவர் சுதா சந்தர். இவருக்கு வயது 22 ஆகிறது. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஆவடி வெள்ளச்சேரியில் இருந்து இங்கு குடி பெயர்ந்துள்ளனர்.
Samayam Tamil chennai youth murder


இந்நிலையில், நேற்றிரவு 8:30 மணி அளவில், இரு சக்கர வாகனத்தில் இளம்பெண்ணுடன் கல்பாளையம், வில்லிவாக்கம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சுதா சந்தரை வழி மறித்துள்ளனர். பின்னர் வாகனங்களில் இருந்து கத்தியுடன் இறங்கிய அந்த கும்பல் சுதா சந்தரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுதா சந்தர் தன்னுடன் வந்த பெண்ணின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புழல் போலீசார், சுதா சந்தருடன் வந்த ராகவி (19) என்ற இளம்பெண்ணை விசாரித்தனர். அதில் பகீர் தகவல் வெளியாகின.

விசாரணையில் அம்பலம்

கொலை செய்யப்பட்ட சுதா சந்தர் ஆவடி வெள்ளச்சேரியில் பள்ளி படித்து வந்தபோதே ராகவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல இடங்களில் சுற்றி காதலித்து வந்த நிலையில் ராகவியின் பெற்றோர் அவர்களது காதலை எதிர்த்துள்ளனர். சுதா சந்தருடன் பழகுவதை நிறுத்திக்கொள்ள என பலமுறை பெற்றோர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். போலீஸ் மூலமாக அவர்களை கண்டுபிடித்து ராகவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் உடனே உறவினரான வசந்த் என்பவருக்கு ராகவியை திருமணம் செய்து முடித்தனர். வசந்த் மூலமாக ராகவிக்கு குழ்ந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகை, பணத்துடன் ராகவி மாயமானார்.

காதலன் சுதா சந்தருடன் இருந்த அவரை மீண்டும் போலீஸ் உதவியுடன் மீட்டு வந்துள்ளனர். அதன் பிறகும் ராகவி சுதாவுடன் வசித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகவியின் அண்ணன் பரத் அவரது கூட்டாளி உதயா என்பவருடன் சேர்ந்து சுதா சந்தரை வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள புழல் போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி