ஆப்நகரம்

சதுரங்க வேட்டை பார்ட் 3, திருப்பதியில் ரைஸ் புல்லிங்... 5 பேர் கைது...

திருப்பதியில் ரைஸ் புல்லிங் எனக் கூறி, ஹைதிராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் லட்சக் கணக்கில் சதுர வேட்டை படப் பாணியில் கொள்ளையடித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்...

Samayam Tamil 6 Nov 2019, 11:05 pm
ஆந்திரா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ரவி கிஷோர். இவர் கடந்த மாதம் 25ஆம் தேதி, திருப்பதியில் ரேடியோ ஆக்டிவ் சக்தி கொண்ட ரைஸ்புல்லிங் பொருள் பெறுவதுக்காக வந்துள்ளார். வந்த இடத்தில் இவரிடம் ஒரு கும்பல், ரூ. 20 லட்சத்தை பெற்றூ கொண்டு மோசடி செய்துள்ளது.
Samayam Tamil Untitled (1)


தன்னிடம் போன் செய்து ரைஸ் புல்லிங் குறித்துக் கூறியவர்கள் மோசடிக்காரர்கள் என்பதை அப்போதுதான் கிஷோர் உணர்ந்துள்ளார். இதையடுத்து கிஷோர், திருப்பதியில் காவல்துறை எஸ்பி கஜராவ்வை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பெண்களைக் குறி வைக்கும் மிகப்பெரிய மாஃபியா... தங்கக் கடத்தல் பின்னணி...

இதற்கிடையில், சமீப நாட்களாக திருப்பதியில் இதுபோன்ற குற்றங்கள் நடப்பதாகப் புகார்கள் குவிந்து வந்தன. இந்நிலையில், ரைஸ் புல்லிங் எனக் கூறி ஏமாற்றும் கும்பல் குறித்து தீவிர விராணியைத் திருப்பதி காவல்துறை முடக்கி விட்டது.

தென் இந்தியாவிலேயே முதல் பெண் தீ அணைப்பு வீரர்..! சென்னை விமான நிலையத்தின் பெருமை..

விசாரணையில் வெங்கட் ரத்தினம், முகேஷ், பிரசாத் , சுனில், சித்தப்பா ஆகியோர்தான் பலரை ஏமாற்றிய ரைஸ் புல்லிங் கும்பல் என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களைக் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து ரூ. 59 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி