ஆப்நகரம்

ராணுவத்தில் கணவர், டிக்டாக்கில் மனைவி..! டூயட் போட்டவரை தீர்த்துக்கட்ட முடிவு!

தேனி அருகே டிக்டாக்கில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்த துணை நடிகை சுகந்தி கூலி படையினருடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Feb 2020, 1:59 pm
தேனி மாவட்டம் நாகலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி இவர் சினிமாவில் துணை நடிகையாக உள்ளார். இவரது கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வருகிறார். இந்நிலையில் சுகந்தியும், அவரது சகோதரியும் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதில் ஆபாச வசனங்களும், பாடல்களுமே அதிகமாக இடம்பெற்றிருந்தன. அவரது வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில் அவரை கண்டமேனிக்கு திட்டியும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
Samayam Tamil தேனி சுகந்தி டிக்டாக் வாலிபர்களை கொலை செய்ய திட்டம்


இந்த நிலையில் வேறொரு நபர் ஒருவர் சுகந்தியின் ஆபாச டிக்டாக் வீடியோவை கண்டித்து அவரையும், அவரது ஊர் பெண்களையும் அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டார். இதனால் கடுப்பான ஊர் மக்கள் சுகந்தியை ஊரை விட்டே துரத்த முடிவு செய்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சுகந்தி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பின்னர் ஊர்மக்கள் கலைந்து சென்றனர்.

'புடிங்க சார் அவனை'... பொதுமக்கள் கோரிக்கையால் டிக்டாக் நடனப்புயல் கைது..!

இதையடுத்து தன் மீது ஏற்பட்டுள்ள கலங்கத்திற்கு காரணமான டிக்டாக் வாலிபர்கள் இரண்டு பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சுகந்தி மதுரை கூலிப்படையைச் சேர்ந்த கார்த்தி என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், என்ன ஆனாலும் பரவாயில்லை. அவர்களை கொலை செய்ய வேண்டும். போட்டு தள்ளுவதே என் முடிவு. எந்த கேஸ் ஆனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பேசும் ஆடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணவன் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், தன்னை ஆபாசமாக பேசியவர்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல் கூலிப்படையை அணுகும் அளவிற்கு துணிந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது. பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை கொலை செய்யக்கூட பயன்படுத்தலாம் என்ற நிலை தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் உச்சகட்ட அவலம்.

அடுத்த செய்தி