ஆப்நகரம்

ஹத்ராஸ் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தடயங்கள் இல்லை! திடீர் திருப்பம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள இளம்பெண்ணின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Oct 2020, 1:42 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான தலித் இளம்பெண் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் படு காயங்களுடன் டெல்லி அலிகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் இப்பெண்ணை வலுக்கட்டாயமாக துப்பட்டாவினால் கட்டி இழுத்து சென்று பலாத்காரம் செய்ததாக அதே கிராமத்தில் உள்ள 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil JusticeForManishValmiki


முதற்கட்ட விசாரணையில் உயர் சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், போலீசிடம் மாட்டிவிடக்கூடாதென்று அவருடைய நாக்கை அறுத்ததாகவும் தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்ததையடுத்து, உறவினர்களும், பொதுமக்களும் அப்பகுதியில் போராட்டத்தில் இறங்கினர். இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையான முறையில் உயிரிழந்துள்ள விவகாரத்தை தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியுள்ள நிலையில், தற்போது மருத்துவமனையின் அறிக்கை புதிய அதிர்ச்சியை தந்துள்ளது. அது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளது ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி விக்ராந்த், '' உயிரிழந்த பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் இருந்தாலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டதால் தடயங்கள் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை என மருத்துவர்கள் கூறியதாகவும், இறுதியான தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செவிலியர்-கணவர் பிரசவ உதவித் தொகை ரூ. 3 லட்சம் கையாடல்!

முன்னதாக இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று அவரது பெற்றோரும், பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியதையடுத்தே அங்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த கோர மரணம் தேசிய அளவில் பூதாகரமாக வெடித்து, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று இறுதி அறிக்கை வருவதற்கு முன்னரே போலீசார் கூறியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அடுத்த செய்தி