ஆப்நகரம்

துப்பாக்கி எடுக்கும் காக்கி... தமிழகத்தில் திடீரென கிளம்பிய ஷூட்டிங்.. ஏன்?

திருச்சியில் காவல்துறையினரை வெட்ட வந்ததாக கூறி இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் இன்று பரபரப்பாக பேசப்படுகிறது.

Samayam Tamil 20 Feb 2023, 5:08 pm
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கடந்த ஒரு வருடமாக எதிர்க்கட்சிகள் முதல் தமிழக ஆளுநர் வரை விமர்சித்து வருவதால் ஆளும் திமுக கட்சிக்கு அழுத்தம் உண்டாகியுள்ளது. அதற்கேற்றாற்போல, கோவையில் நீதிமன்ற வளாகம் முன்பே நடந்த கொலை, பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை, காஞ்சிபுரத்தில் கவுன்சிலர் கொலை, ராணுவ வீரர் திமுக கவுன்சிலரால் கொலை என அடுத்தடுத்த கொடூர கொலைகள் தமிழகத்தை புரட்டிப்போட்டது.
Samayam Tamil tamil nadu police shooting


பொது மக்கள் மத்தியிலும் சட்ட ஒழுங்கு மீது நம்பிக்கை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை மாற்ற காவல்துறையினர் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த தொடங்கிவிட்டனர். அண்மையில் கோவை நீதிமன்ற வளாகம் அருகே நடந்த கொலை வழக்கில் பிடிபட்ட 9 பேரில் இரண்டு பேர் காட்டுக்குள் தப்ப முயன்றதாக கூறி அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இன்று திருச்சியிலும் ரவுடிகள் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி,புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும் சகோதரர்கள். இதில் துரைசாமி மீது கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை வழக்குகள் என 69 வழக்குகள் உள்ளன.

ஐ போன் ஆர்டர்.. பிளிப்கார்ட் ஊழியர் குத்திக்கொலை... கர்நாடகாவில் பயங்கரம்

திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும், தஞ்சை புதுக்கோட்டை அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில் அவர்கள் திருட்டு வழக்கில் தொடர்புடைய நகைகளை குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அந்த நகைகளை மீட்க போலீசார் அவர்கள் இருவரையும் குழுமாயி அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் போலீசாரை தள்ளிவிட்டு ஜீப்பிலிருந்து இறங்கி தப்பித்துள்ளனர். இந்நிலையில், அவர்களை விரட்டி பிடிக்க முயற்சித்தபோது இருவரும் அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்களை கத்தியால் வெட்டியதாகவும் அவர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் இருவரையும் காலில் சுட்டு போலீசார் மடக்கி பிடித்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளையும், போலீசாரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி