ஆப்நகரம்

ஆற்றை கடக்கும் போது அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரர் நிலை என்ன ஆனது?

காஷ்மீரில் ஆற்றை கடக்கும் போது அடித்து செல்லப்பட்ட திருப்பத்தூர் ராணுவ வீரரின் நிலை என்ன ஆனது என தெரியாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 16 Jun 2019, 11:48 am
காஷ்மீரில் ஆற்றை கடக்கும் போது அடித்து செல்லப்பட்ட திருப்பத்தூர் ராணுவ வீரரின் நிலை என்ன ஆனது என தெரியாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Samayam Tamil ஆற்றை கடக்கும் போது அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரர் நிலை என்ன ஆனது?
ஆற்றை கடக்கும் போது அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரர் நிலை என்ன ஆனது?


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சேட்டு. இவரது மகன் சபரிநாதன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். சபரிநாதன் கடந்த 8-ம் தேதி காஷ்மீர் மலைப்பிரதேச பகுதியில் தீவிரவாத ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சக ராணுவ வீரர்கள் மரக்கட்டைகளை பாலம்போல அமைத்து, ஆற்றை கடக்க முயன்றனர்.

அப்போது நிலைதடுமாறி, 10 ராணுவ வீரர்கள் ஆற்றில் விழுந்து விட்டனர். அதில் ஏழு ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கபட்ட நிலையில், மீதி மூன்று பேரை காணவில்லை. இதில் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியை சேர்ந்த சபரிநாதனும் ஒருவர்.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இரவு, ராணுவத்திடம் இருந்து சபரிநாதன் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், மரங்களை வெட்டி பாலம்போல அமைத்து ஆற்றை கடக்க முயன்றோம். அப்போது 10 பேர் விழுந்ததில், உங்கள் மகனும் ஆற்றில் விழுந்து விட்டார். 7 பேர் கிடைத்து விட்டனர். ஆனால் மூன்று பேரும் கிடைக்கவில்லை என்று கூறினர். பிறகு இரவு 8 மணிக்கு போன் செய்து சபரிநாதன் கிடைக்கவில்லை என்று கூறினர். அதன்பிறகு ராணுவத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. சபரியின் பெற்றோர்களும் ராணுவத்தை தொடர்புகொள்ள முடியவில்லை. சபரிநாதன் என்ன ஆனார்? அவரது நிலை என்ன? என்பது குறித்தும் தெரியவில்லை.

இதனிடையே காஷ்மீரில் உள்ள ராணுவத்தினர் சபரிநாதன் குறித்து எவ்வித தகவல்களும் அளிக்காததால் மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சபரியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை‌‌.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சபரிநாதன் எந்த நிலைமையில் உள்ளார்? அவரது உடல் எங்காவது கண்டெடுக்கப்பட்டுள்ளதா என்று எந்த ஒரு தகவலையும் ராணுவத்தினர் தர மறுப்பதாக அவரது உறவினர்கள் கதறுகின்றனர். மாயமாகி 8 நாட்களுக்கு மேலாகியும் மகன் நிலை தெரியாததால், சபரிநாதன் குடும்பத்தினர் அவரது குரலை கேட்க வீட்டின் வாசலில் கண்ணீர்மல்க காத்துக்கிடக்கின்றனர்.

அடுத்த செய்தி