ஆப்நகரம்

திருவண்ணாமலை பயங்கரம்: பிரபல ரவுடி பங்க் பாபு படுகொலை!

திருவண்ணாமலை அருகே பிரபல ரவுடி பங்க் பாபு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

Samayam Tamil 3 Dec 2020, 4:09 pm
திருவண்ணாமலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக நகர செயலாளராக இருந்த கனகராஜ் என்பவர் சிலரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பங்க் பாபு என்பவர் காந்திநகர் பகுதியில் இன்று நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil punk babu murder


இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் அறிந்து வந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவான கொலையாளிகளை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

போலீஸ் உதவியோடு அலங்காநல்லூரில் பாலியல் தொழில்: புகார் கொடுத்தால் கொலை மிரட்டல்!

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கனகராஜை காரில் பின்தொடர்ந்து வந்த மூணு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அவரை வெட்டி கொலை செய்தது. பின்னர் முவரும் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக இருந்து வந்த பங்க் பாபு திமுக கட்சி பொறுப்பில் இருந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி