ஆப்நகரம்

வாலிபர் கொலை: தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருச்செந்தூர் அருகே வாலிபரை கடத்தி கொலை செய்த வழக்கில் சிக்கியுள்ள காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Samayam Tamil 21 Sep 2020, 2:24 pm
Samayam Tamil sathankulam new murder
திருசெந்தூர் அருகே வாலிபர் செல்வன் கொல்லப்பட்ட வழக்கில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் தட்டான்விளை அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32). இவர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி செயலாளர் திருமணவேல் சகோதரரிடம் நிலம் வாங்கியுள்ளார்.

தூத்துக்குடியில் மற்றொரு கொலை: இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் உட்பட 5 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக திருமணவேலுக்கும், செல்வத்துக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த பகை காரணமாக, காரில் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார் செல்வன்.

இதையடுத்து, தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருமணவேல் உட்பட மேலும் 5 மீது திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி