ஆப்நகரம்

கொடுங்கையூர் செல்போன் பறிப்பு: அராஜகம் செய்யும் புள்ளிங்கோக்கல்

சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் மூன்று பேரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 13 Jun 2021, 7:08 pm
சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பிரவஞ்சன் (16) என்பவர் கடந்த 11ம் தேதி அன்று எழில் நகர் அருகே நின்றுகொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த 5 நபர்கள் பிரவஞ்சனை மிரட்டி கத்தியால் தாக்கி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்


இதுகுறித்து பிரவஞ்சனின் தாயார் சந்திரா P6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, P6 கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து, சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்ததில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு..! 'காமுகன்' தலைமறைவு?

அதன் தொடர்ச்சியாக,கணேஷ் (எ) புள்ள கணேஷ் (20), முகமது ஆசின் (எ) மவுத்தையா (19), திருவொற்றியூர் சூர்யா (எ) ஜோசப் (19), குள்ளா (எ) கார்த்திக் (19) ஆகிய 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 கத்திகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு செல்போனுடன் தலைமறைவாகியுள்ள சூர்யா என்ற குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர். கைதானவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த செய்தி