ஆப்நகரம்

நடராஜர் சிலையை விற்க முயன்றவர்களை சுற்றி வளைத்த போலீசார்..! கடலூரில் பரபரப்பு

விருத்தாசலம் அருகே நடராஜர் சிலையை விற்பனை செய்வதற்காக திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 12 Feb 2023, 11:57 am
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி அருகே ஆவினங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவர் மீது ஆவினங்குடி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை ஆவினங்குடி போலீசார் ரோந்து பணியில் இருக்கும் பொழுது ராமர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர்.
Samayam Tamil nadarajar statue


அப்போது அந்த வீட்டில் சந்தேகம் படியாக மூன்று நபர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின்னாக முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் விசாரணையில் மயிலாடுதுறை மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 35), வேப்பூர் வட்டம் பாசார் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 33), காஞ்சிராங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (வயது 42) என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் தனி தனியாக விசாரணை செய்ததில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு சுமார் 2 அடி உயரம் உள்ள நடராஜர் சாமி உலோக சிலையை எங்களிடம் கொடுத்து அதன் மதிப்பு சுமார் 8 கோடி என்றும் அதனை விற்று கொடுத்தால் ஒரு தொகையை கொடுப்பதாக சொல்லி கொடுத்ததாக கூறியுள்ளனர்.

போதையில் ஞாபகத்துக்கு வந்த நண்பனின் மனைவி.. முடிவில் நடந்த கொலை..! நெல்லை பகீர்

தற்போது அந்த சிலையை விற்பதற்காக வேண்டி திட்டம் தீட்டியதாக தெரிய வந்தது பின்னர் அவர்கள் நான்கு பேரையும் ஆவினங்குடி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலையை பறிமுதல் செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி